ஆழக் கடல் எங்கும் சோழ மகராஜன்

Saturday, June 13, 2009

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று

ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்
ஆட்சி புரிந்தானே அன்று
தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்
ஏறி நடக்கின்றான் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எட்டு திசையாவும் கொட்டு பெருசோழன்
ஏறி கடல் வென்றதுண்டு
அவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்
வேங்கை கடல் வீரர் இன்று
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

எங்கள் கடல் மிதில் எதிரி வருகின்ற
இன்னல் இனி மேலும் இல்லை
புலி பொங்கி எழுந்திட்ட தங்க தமிழீழ
பூமி தனிலேது தொல்லை
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

கடலில் என்றாலும் தரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தம்பி
எதிர் படைகள் வரும்போது பாயும் புலிவீரன்
பகையை முடிப்பானே பொங்கி
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

வலிமை தரும் எங்கள் தலைவன்
வழிதன்னில் வங்ககடல் நின்று படும்
கடல் புலிகள் எழுகின்ற போர்கள்
தனிவெற்றி பெற்று தமிழீழம் ஆடும்
காலை விடிந்தது என்று பாடு
சங்ககாலம் திரும்பியது ஆடு (ஆழக்கடலெங்கும்)

No comments:

Post a Comment